ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கடந்த மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. இதில் திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றினர்.
அவர்களுக்கு ஆட்சியர் வளர்மதி கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். திட்ட அலுவலர் வசந்தா உடன் இருந்தார்.