வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ராஜகணபதி நகர் ஜே ஜே நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் இரவு பகல் பாராமல் டாஸ்மாக் கடை அருகே பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று அதே பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் சமைத்த காலை உணவை சாப்பிடாமலும், பள்ளிக்கு வெளியில் பெற்றோர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.