பேரணாம்பட்டு: 140 மது பாட்டில்கள் பறிமுதல்-போலீசார் விசாரணை

508பார்த்தது
பேரணாம்பட்டு: 140 மது பாட்டில்கள் பறிமுதல்-போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு- வி. கோட்டை சாலையில் சில்லறை கடை ஒன்றில் சட்டத்திற்கு புறம்பான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேரணாம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது வெள்ளதசரதன் என்பவரது சில்லறை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 140 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து வெள்ளை தசரதனை கைது செய்த பேரணாம்பட்டு போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி