கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், குடியாத்தம் தாலுகா போலீசார் குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களான, பூங்குளம், செட்டிகுப்பம், மோர்தானா, சைனகுண்டா, செங்குன்றம், தனகொண்டபள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 12 பேரை ஒரே நாளில் குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் கள்ளச்சாராய பொட்டலங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது குறித்து குடியாத்தம் தாலூக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.