வேலூர்: பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

67பார்த்தது
வேலூர்: பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
காட்பாடி: பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைக்கான கூட்டமைப்பு சங்க கூட்டம் காட்பாடியில் நடந்தது. வேலூர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீநாத், பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று கூட்டமைப்பை விரிவுபடுத்துவது, 

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய சலுகைகள் கிடைத்திட விழிப்புணர்வு கூட்டங்களை கிராமங்கள் தோறும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் எல். சடகோபன், எம். சி. லோகு யாதவ், ராமகிருஷ்ணன், மனோகரன், கே. ஜி. சம்பத், முன்னாள் கவுன்சிலர் கே. ஜி. சேகர், கே. வெங்கடேசன், சந்தோஷ்குமார், பி. வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி