வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற ஜூன் 14ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு செய்தல் ஆகிய திருத்தங்கள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.