நேபாளத்தைச் சேர்ந்தவர் டில்லிதேவி. இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகனை பார்க்க வந்தார். மீண்டும் நேபாளத்திற்கு செல்வதற்காக டில்லிதேவி குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயில் வரும்போது டில்லிதேவி திடீரென மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரயில்வே மருத்துவக் குழுவினர் காட்பாடியில் வைத்து டில்லிதேவியை பரிசோதித்தனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.