காட்பாடி பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக தகவலை தொடர்ந்து, காட்பாடி துணை எஸ் பி பழனி உத்தரவின் பேரில் காட்பாடி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் போலீசார் சித்தூர் பேருந்து நிலையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தினர். உடனே வேனை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். கிளீனர் மட்டும் வேநில் இருந்தார்.
வேனை சோதனை செய்ததில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் பிடிபட்ட கிளீனர் காட்பாடி கழிஞ்சூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பதும், வேனை ஓட்டி வந்தவர் சதீஷ் என்பதும் தெரியவந்தது. கிளீனர் தமிழரசனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் சதீஷை தேடிவருகின்றனர்.