குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 30.12.2024 முதல் 01.01.2025 வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (30.12.2024) மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பால சுப்பிரமணியன், மண்டலக் குழுத்தலைவர்கள் நரேந்திரன், யூசுப்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.