தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.