திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீராகமேடு பகுதியில் குரங்கு ஒன்று அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பிகளில் தாவிய போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் குரங்கை மீட்டு மனிதர்கள் இறந்தால் அவர்களுக்கு சடங்கு செய்வது போன்று அந்த குரங்கிற்கு சடங்குகள் செய்து, பாடை கட்டி மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர்.