திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொங்கலுக்கு புதுத் துணி எடுத்து தராததால் மனமுடைந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில் மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சியில் அப்பெண்ணின் கணவன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.