திமிரி அருகே உள்ள விளாப்பாக்கம் இளந்தன் குட்டை தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் சாரதி (வயது 17). இவர், பிளஸ்-2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த தால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று சாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.