திமிரி ஒன்றியத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி 2 கட்டமாக திமிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வட்டாரவள மையத்தில் நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவ லர் பிரேமலதா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச் சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு எண் ணும் எழுத்தும் பயிற்சிகள் குறித்தும், ஆசிரி யர்கள் மாணவர்களுக்கு அடிப்படையில் அவசியம் கற்பிக்கப்பட வேண்டிய வாசிக்கும் திறன், எழுதுதல் திறன் மற்றும் எண்கணித அடிப்படை செயல்பாடுகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர். இதில் 120 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.