ஆற்காடு: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

82பார்த்தது
ஆற்காடு: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை கரை பகுதியைச் சேர்ந்த இமானுவேல் என்கிற சாதிக் பாஷா (வயது 55) என்பவரை ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் இவரின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் இமானுவேல் என்கிற சாதிக் பாஷாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி