திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் தலைமையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கவும் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாங்க கூடாது என உறுதிமொழி ஏற்றனர்.