அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை சேர்ந்தவர் டில்லி ராணி. இன்று மாலை தனியார் கம்பெனி பேருந்தை பிடிப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். தண்டலம் காருண்யா ஆசிரியர் பயிற்சி மையம் அருகில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியதில் 2 பேரும் காயம் அடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.