அரக்கோணம் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

50பார்த்தது
அரக்கோணம் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பாதைகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர். ஏ. பி. டி. ஆர். பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச். டி. சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை அரக்கோணம் மின் கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்
லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட் பேஸ் -3, கல்மேல்குப்பம், வில்வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், பெல் டவுன்ஷிப், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய் யப்படும்.
இந்த தகவலை ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஆர். குமரேசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி