ராணிப்பேட்டையில் வடமாநில தொழிலாளி திடீர் பலி

69பார்த்தது
ராணிப்பேட்டையில் வடமாநில தொழிலாளி திடீர் பலி
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுடோஷ்ஜா (வயது 42). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லிக்குப்பம் சிப்காட் பேஸ்-3 பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் சாப்பிட்டபின் உடல்நிலை சரியில்லாமல் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் விடுதிக்குச் சென்று தூங்கினார். பெருநேரம் ஆகியும் அவர் எழவில்லை. இந்நிலையில் உடன் தங்கியிருந்தவர்கள் அசுடோஷ்ஜாவை எழுப்பினர். ஆனால் அவர் இறந்த நிலையில் இருந்தார்.

 இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அங்குச் சென்று இறந்த அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி