பள்ளிகொண்டா அருகே இருசக்கர வாகனம் திருட்டு

56பார்த்தது
பள்ளிகொண்டா அருகே இருசக்கர வாகனம் திருட்டு
பள்ளிகொண்டா அடுத்த கழனிபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயசீலன் மகன் அகிலன் (வயது 35). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (மார்ச்.18) இரவு தனது வீட்டுக்கு வெளியே மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். 

பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி