நாராயணி பீடத்தில் ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழா!

58பார்த்தது
நாராயணி பீடத்தில் ஸ்ரீசக்திஅம்மா ஜெயந்தி விழா!
வேலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஸ்ரீசக்திஅம்மாவின் 48வது ஜெயந்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்றைய முன்தினம் மூலமந்திர ஹோமம், நேற்று ஆயுஷ் ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி நாளான இன்று (ஜன. 3) காலை 5 மணியளவில் நாராயணி பீடத்தில் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம், சர்வ மங்கள நாராயணி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாராயணி பக்தசபா பக்தர்கள் வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக நிகழ்ச்சி திடலுக்கு வந்தனர். இதைத் தொடர்ந்து, காலை 11 மணியளவில் ஸ்ரீசக்தி அம்மாவுக்கு மலர் அபிஷேகமும், பாத பூஜையும் நடைபெற்றது. இதனையடுத்து 12 மணி முதல் ஸ்ரீசக்தி அம்மா பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நிலையில், ஸ்ரீ சக்தி அம்மா ஜெயந்தி விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகவும், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி