மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்

902பார்த்தது
மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்
கந்தனேரி மணல் குவாரியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்க மாநில தலைவர் சங்கர் தலைமையில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் வேண்டா இது குறித்து கனிமவளத்துறையிலிருந்து மாட்டுவண்டி உரிமையாளர்களின் பட்டியல் கேட்டு தபால் வந்துள்ளது. தற்போது நீங்களும் மனு அளித்திருப்பதால் அந்த குவாரியிலிருந்து அணைக்கட்டு தாலுகாவில் 10 கிலோமீட்டர் வரும் கிராமங்களை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்களின் விவரங்களை விரைவாக தயார் செய்து பட்டியலுடன் ஆர்டிஓ விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து கனிமவளத்துறையினர் உங்களுக்கு அனுமதி வழங்குவார்கள் என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி