அணைக்கட்டு தாலுகா, மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மேல்பள்ளிப்பட்டு, ஆசனாம்பட்டு, குப்பம்பாளையம், பாக்கம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
வேலூர் கலால் துணை ஆணையர் முருகன், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா ஆகியோர் தலைமை தாங்கினர். 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 1, 500-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்து கொண்டு 100 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இதில் ஆம்பூர் வில்வநாதன் எம். எல். ஏ. , மாவட்ட ஊராட்சி தலைவர் மு. பாபு, கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.