ஆம்பூர் அருகே மின்சாரம் பாய்ந்து தற்காலிக தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் பிரசாத்(31) இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 5 வருட காலமாக துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார் இந்த நிலையில் இன்று அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்காக அருகிலுள்ள அறையில் இருந்த மின்சார பெட்டியில் சுவிட்ச் ஆன் செய்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து விஜய் பிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆம்பூர் அருகே ஊராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.