ஆம்பூர்: தூய்மை பணியாளர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

67பார்த்தது
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிகுட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் பிரசாத் (31) இவர் துத்திப்பட்டு ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்காக அங்கிருந்த மின்சாரப்பட்டியில் ஸ்விட்ச் ஆன் செய்த போது மின்சாரம் பாய்ந்து விஜய் பிரசாத் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஊராட்சி நிர்வாகம் எவ்வித உதவியும் செய்யாததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீரென ஆம்பூர் பேர்ணாம்பட்டு செல்லும் சாலையில் சடலத்தை சாலையில் வைத்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி