திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி
கடித்ததில் புள்ளிமான் படுகாயமடைந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காயமடைந்த மானை குட்டியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள காப்பு காட்டு பகுதியில் விட்டனர்.