வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47வது வார்டில் உள்ள வேலப்பாடி பூந்தோட்ட பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணியினை 47வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினரும் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எழிலரசன் இன்று (மார்ச் 20) நேரில் சென்று சாலையின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.