குடியாத்தம் குமரன் மீது ஆம்பூரில் பாமகவினர் புகார் மனு!

60பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திமுக கட்சியின் பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்டத் தலைவர் குமரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களை அவதூறாக பேசி தனது youtube இணையதளம் மூலம் வெளியிட்டதால் இவர் மீதும் இதுபோன்று youtube சேனல் பெயர் தெரியாத மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும் அவர்களது இணையதள youtube சேனலை முடக்க கோரியும் புகார் மனு அளிக்கப்பட்டது.


மேலும் இதில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி