கணவன் சந்தேகப்பட்டு மனைவியை துன்புறுத்தியதால் புகார்

52பார்த்தது
ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (48) இவரது மனைவி விமலா இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் சுரேஷ் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் இவரது மனைவி விமலா காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார் இந்த நிலையில் சுரேஷுக்கு அவரது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் இன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சுரேஷ் அவரது மனைவியை தாக்கியதாகவும் இதனால் மனைவி விமலா ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது புகார் அளித்துள்ளார்

இதனை அறிந்த சுரேஷ் உமராபாத் காவல் நிலையத்தில் மது போதையில் சென்று புகார் அளிக்க சென்றதாக கூறப்படும் நிலையில் திடீரென பின்பக்கமாக சென்று காவல் நிலைய வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தனது மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இரவு நேரம் என்பதால் செய்வது அறியாமல் திகைத்த காவல்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த சுரேஷை கீழே இறக்கினர் இதனைத் தொடர்ந்து அவர் மது போதையில் இருந்ததால் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் காவல்துறையினர் பேசி அனுப்பி வைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி