திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியம்பட்டி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் POCSO, இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெருகிவரும் சைபர் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி (தங்களை காவல்துறையினர் டிஜிட்டல் கைது செய்திருப்பதாக கூறி பணம் பறித்தல்), டாஸ்க் மோசடி (டாஸ்க் செய்தால் அதிக பணம் தருவதாக கூறி), ஆன்லைன் டிரேடிங் மோசடி, ஆன்லைன் முதலீடுகள் மோசடி (சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி), ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும், அந்த குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.