திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வந்திதா பாண்டேவை மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மேலும், பதவி ஏற்கும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை மத்திய பணியில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.