காஷ்மீரில் சிக்கிய மாணவர்களை மீட்க வைகோ கோரிக்கை

58பார்த்தது
காஷ்மீரில் சிக்கிய மாணவர்களை மீட்க வைகோ கோரிக்கை
தமிழ்நாட்டை சேர்ந்த 52 மாணவர்கள் காஷ்மீரில் சிக்கி இருக்கின்றனர். அவர்களை மீட்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும், அவசர உதவி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அமைச்சர்களுக்கு தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார். விரைவில் அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி