ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதனையடுத்து உக்ரைன் ஏவுகணையை பயன்படுத்தினால் பதிலடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் போர் மேலும் தீவிரமடைந்தது. எனவே உக்ரைனுக்கு மேலும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடியில் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.