ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கெல்லாம் கோயில்களைச் சுற்றி, அசைவ உணவு கடை, இறைச்சிக் கடை இருக்கிறதோ, அவற்றை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். கோவையில் நடந்த சம்பவத்தை கண்டித்த அப்பகுதியினர் கடையை அகற்றவும், சுப்ரமணியம் மீதான வழக்கை திரும்ப பெறவும் வலியுறுத்தி திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர், அவர் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்" என்றார்.