வேரோடு விழுந்த நூறாண்டு புளியமரம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

74பார்த்தது
வேரோடு விழுந்த நூறாண்டு புளியமரம்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் நூறாண்டு பழமையான புளியமரம் பலவீனமாக இருந்தது. இன்று (மே 18) காலை புளியமரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், புளியமரம் விழுவதை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டனர். இதனால் பலத்த உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. போலீசாரும் நெடுஞ்சாலை துறையினரும் புளியமரத்தை ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றினர்.

தொடர்புடைய செய்தி