தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

76பார்த்தது
தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை, செங்கல்பட்டு, டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், மக்கள் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த இரு தினங்களில் பெய்யக்கூடிய மழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி