சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ராஜேஷ்வரி. இவர் IIT-ல் உயர்கல்வி பயிலத் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், “ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்” என்றார்.