நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, உங்களது சுயநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்து விட்டீர்கள். இனி உங்களுடன் பயணிப்பது, என் தாய்த்தமிழையும், தமிழர் நல் திருநாட்டையும் இடுகாட்டில் புதைக்கும் தமிழின துரோகமே" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.