பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பேசுகையில், ''நான் கேரவனில் இருந்தபோது, மோசமான ஒரு நிகழ்வை எதிர்கொண்டேன். அதனால் என் கண்கள் குளமாகின. படப்பிடிப்புக்காக மேக்அப் உடன் கண் மை போட்டிருந்ததால், அந்த சமயத்தில் நான் அழவில்லை. அதன்பின், அந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். இந்த மோசமான நிகழ்வு எந்த படப்பிடிப்பின்போது என்றோ, என்ன நடந்தது என்றோ தமன்னா குறிப்பிடவில்லை.