மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிவிட்டு மாணவர்கள் சிலர் அவ்வழியாக வந்த டிராக்டரில் ஏறி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது ஸ்ரீதர் சஞ்சய் வனங்கடே என்ற 14 வயது மாணவன் தான் இறங்க வேண்டிய இடம் வந்தது டிரைவரிடம் தெரிவிக்காமல் டிராக்டரில் இருந்து குதித்துள்ளான். இதனால் டிராக்டர் பின்னால் இணைக்கப்பட்டிருந்த டிராலியின் சக்கரங்கள் வரிசையாக 3 முறை அந்த மாணவன் மீது ஏறியது. இதில் உடல் நடுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். டிரைவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.