மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச., 24) செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. திருப்பூர், திருச்சி, கோவை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, சேலம், நாமக்கல், தேனி, திருவாரூர், விழுப்புரம், சென்னை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மின்தடை ஏற்படும்.