மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன., 23) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், சில பகுதிகளில் பணிகள் முடியும் வரையும் மின் நிறுத்தம் செய்யப்படும். திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், ஈரோடு, அரியலூர், தர்மபுரி, திருச்சி, சேலம், கோவை, கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது.