பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று (பிப்., 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. சென்னை, தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.