மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்., 05) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின்சாரம் இருக்காது. தஞ்சை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி, வேலூர், தர்மபுரி, சென்னை, சிவகங்கை, கோவை, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.