சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய சிவராத்திரி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று (ஆகஸ்ட் 2) திருவாதிரை நட்சத்திரத்தில் சிவராத்திரி வருவது தான். வட மாநிலங்களில் இதை சாவன் சிவராத்திரி என கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் சிவனுக்கு ஜல அபிஷேகம் செய்து வழிபடுவது பல பலன்களைத் தரும். மேலும் எள் சமர்ப்பணம் செய்து, எள்ளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.