தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 9) மாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, விருதுநகர், தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க உள்ளது.