நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா தனியார் தேயிலை எஸ்டேட்டில், 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி யானை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானை இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்றனர். தொடர்ந்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவிற்கு பிறகே யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.