சென்னையில் நாய் கடித்து பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காயமடைந்துள்ளார். ராயப்பேட்டை பாலாஜி நகர் முதல் தெருவில் கணவருடன் நடைப்பயிற்சி சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா மகேஸ்வரியை 2 முறை நாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த உமா மகேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் சுரேஷ் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.