TN: வெயிலில் மயங்கி விழுந்து மாநகராட்சி ஊழியர் பலி

58பார்த்தது
TN: வெயிலில் மயங்கி விழுந்து மாநகராட்சி ஊழியர் பலி
மதுரை: குப்பை சேகரித்து கொண்டிருந்த மாநகராட்சி ஊழியர் வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் நாகலாபுரத்தைச் சேர்ந்த மணிவேல் (55) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மணிவேல் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக கடந்த 35 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியில் வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படும் நிலையில் பணியின் போது மணிவேல் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி