தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், நாளை (ஜூன் 1) நள்ளிரவு 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.